இந்தியாவின் கதை - முகவுரை

 "தன் வரலாற்றை மறந்த இனத்தை,  அந்த வரலாறும் நினைவு கொள்ளாது."

இந்தியாவையும், அதன் மக்களையும் பற்றி பல வரலாறுகள் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அதன் உண்மையான கதையை தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
       
"பழமையைப் பற்றித் தெரியாதவர்களால் புதுமையைப் படைக்க இயலாது"

இந்தியா என சொன்னதும், இன்று இருக்கும் நாட்டை நினைக்க வேண்டாம். இது வெறும் 73 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஒரு குழந்தை. என்னுடைய கதை இந்த நிலப்பரப்பை பற்றியது. ஆங்கிலேயர்கள், பிரன்சுக்காரர்கள், டட்ச்சுக்காரர்கள் பல குறு மன்னர்கள், மொகலாயர்கள், அரேபியர்கள், நெப்போலியன்,  தைமூர், ஏன்??  மனித இனத்தின் முதல் மனிதனை கண்ட மாபெறும் வரலாறு கொண்ட நிலம் இது.

இதை ஒரு பதிவில் சொல்ல முடியாததால் ஒரு தொடராக எழுத உள்ளேன். சில வரலாறை சுருக்கமாகவும், சில வரலாறை விரிவாகவும் எழுத இருக்கிறேன்.  யாரேனும் குறிப்பாக ஒரு நிகழ்வை பற்றி கேட்டால்,  அதற்காக ஒரு தனி பதிவும் எழுதவுள்ளேன்.

பல கோடி ஆண்டுகள் என்னுடன் பயணிக்கத் தயாரா??
இல்லையா?
சரி, வரும் வெள்ளிக்கிழமை அன்று மாலைக்குள் தயாராகுங்கள்.

அன்று "இந்தியாவின் கதை" என்ற என் தொடரின் முதல் அத்தியாயம் வெளியிடப்படும்.


Comments

Vijaya Raghavan said…
வயிற்றுப் பசி கூட காலம் கடந்தால் மறக்கலாம். ஆனால் அறிவுப்பசி மரணம் அறியாதது, மயக்கம் காணாதது...
Ashok Kumar said…
வெள்ளிக்கிழமை வெளியாகும் முதல் அத்தியாயத்தை பார்த்த பிறகு, அறிவுப் பசி இன்னும் அதிகமாகலாம்.

Popular posts from this blog

A Warrior and Gardener

Credit Note

48 Laws of Power - Law 9: Win Through Actions, Never Through Argument