இந்தியாவின் கதை : அத்தியாயம் 7- முகமது கோரி
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4cuV0W5IV6R9XoS-DwrbniCKKyGPJMXglFpRAcTBq5oxindakwNVpfkyOMOvDxAyI7U-4UAPxA5FTHLtfwRT9yxRb12SEJW9FjBS35ZcOtp7mWh5jHivAN5vS1Ixd6Q8cLfJLmFtChoM/s320/images+%25287%2529.jpeg)
கி. பி. 1149 ஆம் ஆண்டில் இன்றைய ஆப்கானிஸ்தானின் கோரி எனும் இராஜ்ஜியத்தில் பிறந்த ஒரு குழந்தை தான், தெற்காசியாவில் முஸ்லீம்களின் இராஜ்ஜியம் அமைய காரணமாக அமையப் போகிறது என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்த குழந்தையின் பெயரே, "முகமது கோரி". இன்றைய ஆப்கானிஸ்தானின், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தார். ஆனால் அந்த இடத்திற்கு அவர் சுலபமாக வர வில்லை. 1173 இல் கஜினி முகமது வின் சொந்த நகரான கஜினியைக் கைப்பற்றி அரச வம்சத்தைக் கூண்டோடு அழித்தார். 1175 இல் முல்தான் பிரதேசத்தைக் கைப்பற்றித் தன் அரசோடு இணைத்துக் கொண்டார். 1176 இல் குஜராத்தைத் தாக்கி, அதன் அரசி நாயகி தேவியிடம் தோற்று ஓடினார். இதே காலகட்டத்தில் டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருப்பது, சௌகான் இனத்தின் கடைசி மன்னர் பிருத்விராஜ் சௌகான். இவருக்கு வரலாற்றில் பலச் சிறப்புகள் உண்டு. அதில் அவருடையக் காதல் திருமணம் முக்கியமானது. பிருத்விராஜ் ஜூம், கன்னோசி நாட்டு மன்னன் ஜெயச்சந்திரனின் மகள் சம்யுக்தையும் மையல் கொண்டிருந்தனர். இதை அறிந்த ஜெயச்சந்திரன், உடனே சம