Posts

இந்தியாவின் கதை- அத்தியாயம் 1.மனித இனம்

Image
                          நாம் அனைவரும் பள்ளியிலேயே, வரலாறு படிப்பதற்கு முன் அறிவியிலைப் படித்ததால், இன்றும் அறிவியலோடுத் தொடங்குவோம். 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் - அண்டம் உருவாகிறது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் - சூரியக்குடும்பம் உருவாகிறது.  380 கோடி ஆண்டுகளுக்கு முன் - ஒரு செல் உயிரினம் உருவாகிறது.  16 கோடி ஆண்டுகளுக்கு முன் - குட்டி போட்டு பாலூட்டும் இனம் உருவாகிறது.               இத்தனை ஆண்டுகளில்,  உலகம் அழிவையும் சந்தித்தே வந்தது. கடல்கள் மூலமாகவும், விண்கற்கள் விழுந்ததன் காரணமாகவும் தட்ப வெப்ப நிலை மாறியது. அதனால் சில உயிரினங்கள் முற்றிலும் அழிந்தது. அதில் டைனோசர்கள் முக்கியமானவை. ஆனால் அதே தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் வேறு சில உயிரினங்களில் மரபனு மாற்றம் ஏற்பட்டு வேறு சில உயிரினங்கள் தோன்றின.                                இன்று மனிதனின் மூதாதையர்கள் யார் என்றால், குரங்க...

இந்தியாவின் கதை - முகவுரை

 "தன் வரலாற்றை மறந்த இனத்தை,  அந்த வரலாறும் நினைவு கொள்ளாது." இந்தியாவையும், அதன் மக்களையும் பற்றி பல வரலாறுகள் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அதன் உண்மையான கதையை தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.         "பழமையைப் பற்றித் தெரியாதவர்களால் புதுமையைப் படைக்க இயலாது" இந்தியா என சொன்னதும், இன்று இருக்கும் நாட்டை நினைக்க வேண்டாம். இது வெறும் 73 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஒரு குழந்தை. என்னுடைய கதை இந்த நிலப்பரப்பை பற்றியது. ஆங்கிலேயர்கள், பிரன்சுக்காரர்கள், டட்ச்சுக்காரர்கள் பல குறு மன்னர்கள், மொகலாயர்கள், அரேபியர்கள், நெப்போலியன்,  தைமூர், ஏன்??  மனித இனத்தின் முதல் மனிதனை கண்ட மாபெறும் வரலாறு கொண்ட நிலம் இது. இதை ஒரு பதிவில் சொல்ல முடியாததால் ஒரு தொடராக எழுத உள்ளேன். சில வரலாறை சுருக்கமாகவும், சில வரலாறை விரிவாகவும் எழுத இருக்கிறேன்.  யாரேனும் குறிப்பாக ஒரு நிகழ்வை பற்றி கேட்டால்,  அதற்காக ஒரு தனி பதிவும் எழுதவுள்ளேன். பல கோடி ஆண்டுகள் என்னுடன் பயணிக்கத் தயாரா?? இல்லையா? சரி, வரும் வெள்ளிக்கிழமை அன்று மாலைக்குள் த...

தானத்தின் மகத்துவம்

        "தானம்" என்ற வார்த்தைக்கு பல இலக்கணம் இருக்கிறது. ஆனால் நான் மகாபாரதத்தை வைத்து எடுத்துக்காட்டாக கூறுகிறேன்.           தானம் செய்வதில் தர்மர் வல்லவராயினும், அனைவரும் கர்ணனின் புகழையே பெறுமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டார். கிருஷ்ணனும் யோசித்து விட்டு,  "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும் சென்றனர்.           முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர். தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப் பட்டு விட்டன, மழை பெய்வதால் தற்போது விறகு வெட்டவும் முடியாது, அதனால் நீங்கள் தாராளமாக இங்கு சாப்பிட்டு செல்லுங்கள்" என்றார். அதற்கு அவர்களோ, "பரவாயில்லை அரசரே, நாங்கள் வருகிறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றனர்.             செல்லும் வழ...

தர்மத்தின் மகத்துவம்

       தர்மம் என்ற வார்த்தையின் பொருளை, மகாபாரதம் வாயிலாக மட்டுமே முழுமையாக உணர முடியும். மகாபாரத போரில், கிருஷ்ணர் செய்த சூட்சுமங்களில் மிகவும் பெரிது எது என்றால்,  சிலர் பீஷ்மரை வீழ்த்த போட்ட திட்டம் என்றும், இன்னும் சிலர் கர்ணனை வீழ்த்த போட்ட திட்டம் என்றும் கூறுவர். ஆனால் உண்மையில், மகா மந்திரி விதுரரை வீழ்த்த போட்ட திட்டமே, மிகவும் அற்புதமானது.         விதுரர் எங்கே போரிட்டார்? அவரை எப்படி கிருஷ்ணர் வீழ்த்தினார்? என நினைக்கிறீர்களா?? சொல்கிறேன். பீஷ்மரோ, துரோனாச்சாரியரோ, கர்ணனோ,  ஏதோ ஒரு இடத்தில் அதர்மம் புரிந்தவர்களே. ஆதலால், அவர்களை வீழ்த்த அவர்கள் செய்த அதர்மத்தின் பலனையே, கிருஷ்ணர் தன் பலமாக மாற்றினார். ஆனால் விதுரரோ, எந்த அதர்மமும் புரியவில்லை. சூதாட்ட மேடையில், கௌரவர்களுக்கு  எதிராகவும், குலமகள், சக்ரவர்த்தினி பாஞ்சாலிக்கு ஆதரவாகவும் வாதிட்டவர் விதுரர் மட்டுமே.          அன்று அவர் செய்த இந்த தர்மத்தால், அவர் மகாபாரத போரில் இறக்க கூடாது என்று நிர்ணயம் செய்ய பட்டு விட்டது. விதுரரோ தன் அண்ணணுக்கா...

Law of Triangle theory

நம் ஒவ்வொரு சிந்தனையும், நம் ஒவ்வொரு செயலும் பல குடும்பங்களையும் பல தலைமுறைகளையும் பாதிக்கும், ஒரு மைய புள்ளியில் முற்று பெறும் வரை....!!! நியதி: இறைவன் மிகப் பெரியவன்...!🙏