தர்மத்தின் மகத்துவம்
தர்மம் என்ற வார்த்தையின் பொருளை, மகாபாரதம் வாயிலாக மட்டுமே முழுமையாக உணர முடியும். மகாபாரத போரில், கிருஷ்ணர் செய்த சூட்சுமங்களில் மிகவும் பெரிது எது என்றால், சிலர் பீஷ்மரை வீழ்த்த போட்ட திட்டம் என்றும், இன்னும் சிலர் கர்ணனை வீழ்த்த போட்ட திட்டம் என்றும் கூறுவர். ஆனால் உண்மையில், மகா மந்திரி விதுரரை வீழ்த்த போட்ட திட்டமே, மிகவும் அற்புதமானது. விதுரர் எங்கே போரிட்டார்? அவரை எப்படி கிருஷ்ணர் வீழ்த்தினார்? என நினைக்கிறீர்களா?? சொல்கிறேன். பீஷ்மரோ, துரோனாச்சாரியரோ, கர்ணனோ, ஏதோ ஒரு இடத்தில் அதர்மம் புரிந்தவர்களே. ஆதலால், அவர்களை வீழ்த்த அவர்கள் செய்த அதர்மத்தின் பலனையே, கிருஷ்ணர் தன் பலமாக மாற்றினார். ஆனால் விதுரரோ, எந்த அதர்மமும் புரியவில்லை. சூதாட்ட மேடையில், கௌரவர்களுக்கு எதிராகவும், குலமகள், சக்ரவர்த்தினி பாஞ்சாலிக்கு ஆதரவாகவும் வாதிட்டவர் விதுரர் மட்டுமே. அன்று அவர் செய்த இந்த தர்மத்தால், அவர் மகாபாரத போரில் இறக்க கூடாது என்று நிர்ணயம் செய்ய பட்டு விட்டது. விதுரரோ தன் அண்ணணுக்காக போர்க்களம் நிச்சயம் வருவார். அப்படி அவர் களத்திற்கு வந்து நின்றால், அவரை அர்